பட்டின பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் நான் எதிர்க்கிறேன் - சீமான்!

தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தை அரசு அனுமதித்தாலும் தான் எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

பட்டின பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் நான் எதிர்க்கிறேன் - சீமான்!

கடந்த 2018 ஆம் ஆண்டு சீமான் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அவர், சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஆஜரானார்.

வழக்கின் விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு நிலவி வருவதை சுட்டிக்காட்டி, அமைச்சர் அதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், பல்லக்கில் பயணம் செய்பவர் புண்ணியவான், அவரை தூக்கி சுமப்பவன் பாவி என்ற கோட்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார். பல்லக்கில் தூக்கி சொல்வதை ஆதீனமே வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று பேசிய அவர், அரசே அனுமதித்தாலும் தான் எதிர்ப்பதாக கூறினார்.