"குடகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாக தமிழ்நாடு  இருந்திருக்கும்" சீமான் வருத்தம்!

"குடகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாக தமிழ்நாடு  இருந்திருக்கும்" சீமான் வருத்தம்!

குடகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாக தமிழ்நாடு  இருந்திருக்கும் என ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வைகை அணை சாலைப் பிரிவில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக மேடை ஏறியதும் மூன்று மாத பெண் குழந்தைக்கு வேலுநாச்சியார் என்று பெயர் சூட்டினார் சீமான். இதையடுத்து பேசிய அவர் இங்கே உள்ள முல்லைப்பெரியாறு அணையை பென்னிக்குக் என்ற பெருந்தகை கட்டினார். அதற்காக அவரது மனைவி தனது 300 பவுன்  நகையை அணை கட்டுவதற்காக கொடுத்தார். நமது வறட்சியை போக்க நம்மை வளமாக்க அவர்கள் அணையை கட்டினார்கள். அணையை கட்டியது நமது முன்னோர்கள். அந்த அணை வெறும் சுண்ணாம்பும் மண்ணும் அல்ல. அவர்களது உழைப்பில்  வியர்வையும் ரத்தமும் சதையுமாக இருக்கிறது என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  நாம் கட்டிய முல்லைப் பெரியாறு அணை நமக்கு பயன்படவில்லை. இப்போது இடுக்கி மாவட்டம் கேரளாவுக்கு சென்றதால் நாம் தண்ணீருக்கு அலைகிறோம். இது பேரவலம். நமது இடத்தை இழந்ததால் நமது பலத்தை இழந்தோம். அதே போல காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதியில் 90 விழுக்காடு தமிழர்களாக இருந்தார்கள் வாழ்ந்தார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவர்கள் தமிழ்நாட்டோடு இணையுங்கள் என்று போராடினார்கள். ஆனால் அவர்கள் கர்நாடகா மாநிலத்தோடு இணைக்கப்பட்டார்கள். இது வரலாற்றில் மிகப்பெரிய பிழை. காவிரி உற்பத்தியாகும் குடகும் முல்லைப்பெரியாறும்  உற்பத்தியாகும் இடுக்கியும் தமிழ் நாட்டோடு இருந்திருந்தால் தமிழ்நாடு உலகிலேயே செல்வம் கொழிக்கும் நாடாகவும் வளம் கொழிக்கும் நாடாகவும் இருந்திருக்கும் என்று பேசினார். Madras Presidency - Wikipedia

மேலும், ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு வாக்குரிமை அளித்தால் அவர்கள் தேர்தலை தீர்மானிப்பவர்கள் ஆவார்கள் என்றும்  இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் இவர்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்த சீமான், இலங்கையிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டதை போன்ற நிலை ஏற்படும் என்றும் பேசினார். 

இதையும் படிக்க | "காமராஜர் வீட்டிற்கு ஜன சங்கத்தினர் தீவைத்த போது அவரை காப்பாற்றியது திமுக தொண்டன்" ஆர்.எஸ்.பாரதி பேச்சு!