ராகுல் காந்தி பேசினால் பாஜக ஆட்சிக்கு ஆபத்து - காங்..

ராகுல் காந்தி பேசினால் பாஜக ஆட்சிக்கு ஆபத்து - காங்..

மேயர் பிரியாராஜன்  தாக்கல் செய்த சிறப்பான பட்ஜெட் காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறோம்  என காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் திரவியம்  வரவேற்று பிறகு காங்கிரஸ் சூழலை விளக்கும் விதமாக பேசினார்.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதில்

கருப்பு உடை 

இன்றைய தின எங்களுடைய சக  உறுப்பினர்களும் மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்திருக்கின்றோம். இந்திய திருநாட்டில் 50 ஆண்டுகாலம் வழி நடத்திய இந்திய தேசிய காங்கிரஸ் உடைய எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை அசிங்கப்படுத்துகின்ற வகையில் சாதாரண குற்றம் எதற்காக இரண்டு ஆண்டுகள் சிறிதண்டனை, இது மட்டும் இல்லாமல் அந்த வாழ்க்கைக்கு மேல் முறையீடு செய்ய உள்ள நிலையில் அவரை பார்த்து நீக்கம் செய்துள்ளார்கள் .

மேலும் படிக்க | இ-சேவை மையம் - தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ் !

பொய் வழக்கு என நிரூபிப்போம் - ராகுல் பதவி நீக்கம்

இதை அனைத்தையும் கண்டிக்கின்ற வகையில் நாங்கள் அனைவரும் கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்துள்ளோம் நாளையும் கருப்பு உடை அணிந்து வருவோம். நாளை மாமன்ற கூட்டம் நிறைவடைந்த உடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.

 ராகுல்காந்தி பேசினால் அவர்களின் ஆட்சிக்கு ஆபத்து என்பதால் அவரை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. விரைவில் இது பொய் வழக்கு என நிரூபிப்போம்.என காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் திரவியம்  வரவேற்று பேசினார்.