கருப்பு , சிவப்பு , நீலம் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்தி நாடளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறலாம்.....

காவியை அழிக்க அனைத்து கருப்பு, சிவப்பு, நீலமும் ஒன்று சேர வேண்டும் என திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா

கருப்பு , சிவப்பு , நீலம் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்தி நாடளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறலாம்.....

சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமை கட்சி சார்பில் பெரியாரியல் பேரறிஞர் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பெரியாரியல் பேரறிஞர் வே.ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

காவியை அழிக்க அனைத்து கருப்பு, சிவப்பு, நீலமும் ஒன்று சேர வேண்டும் என திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.