"துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால்..." எடப்பாடியை தாக்கி பேசிய கோவை செல்வராஜ்..!!

"துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால்..." எடப்பாடியை தாக்கி பேசிய கோவை செல்வராஜ்..!!

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கண்டிக்கத்தக்க பேச்சு:

”எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது தகுதித், தராதாரம் இல்லாமால், மூன்றாம் தர அரசியல் வாதி போல் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் என்னை  பேசியுள்ளார், அவரின் தரகுறைவான பொறுப்பெற்ற செயலை அதிமுகவினர் கேவலாக பார்க்கின்றனர் எனக் கூறிய அவர் ஜே.சி.டி பிராபகரை எடப்பாடி பழனிச்சாமி தரகுறைவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

வரலாறு தெரியாதவர்:

மேலும் பேசிய அவர் ”அதிமுகவின் வரலாறு தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி.  அவர் கடந்த காலங்களில் வாய் மூடி உட்கார்ந்து கொண்டிருந்தவர் தான் எடப்பாடி என கூறிய அவர் துரோகம் செய்வதை தவிர எடப்பாடிக்கு என்ன தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு துரோகம் செய்வதவர் தான் எடப்பாடி என பேசிய அவர் இந்தியாவில் மட்டும் இல்லை உலகத்தில் துரோகத்திற்கு நோபல் பரிசு  கொடுக்க வேண்டும் என்றால் அதை எடப்பாடிக்கு  கொடுக்கலாம் என்று காட்டமாக கூறினார்.

ஆணவத்தின் உச்சம்:

அரசியலில் பண்பாடு தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிய அவர் ஆணவத்தின் உச்சியில் புத்தி சுவாதீனம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார் எனவும் அதிமுகவை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு முட்டாப் பையன் எடப்பாடிக்கு அதிமுகவின் வரலாறு தெரியுமா என்றும் அதிமுகவை அழிக்கும் சக்தியாக எடப்பாடி உள்ளார் எனவும் கூறிய அவர் எங்களைப் பற்றி பேச தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா வீடு காவலாளி..:

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என்று கூறியது அவரின் வீட்டுக்கு முதல்வராக இருந்த போது பாதுகாப்பு கொடுத்தையா??? என்று கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் ஆட்சியில் இருந்தபோது கொடநாடு வழக்கில் ஏன் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை என்றும் அப்போது கொடநாடு வழக்கு தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த 7  பேரை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவின் ஏழரை நாட்டு சனி:

அதிமுகவிற்கு ஏழரை நாட்டு சனி தான் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்த அவர் இதற்குப் பின்பு எங்களைப் பற்றி தகாத முறையில் பேசினால் அவர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என்றும் 41 ஆயிரம் கோடி ஊழல் பற்றி ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட வேண்டிய நேரத்தில் வெளியிடுவார் என்றும் அப்போது அவர் தேர்தலில் நிற்க மாட்டார், சிறையில் இருப்பார் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் ஒண்ணுமே செய்ய முடியாது என்றும் கூறினார்.

சசிகலாவின் பின்னால்..:

சசிகலா இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்க்கை இல்லை என கூறிய செல்வராஜ் மேலும் சசிகலா பழனிச்சாமியை அமரச் சொன்னால் கூட பின்னால் கையை கட்டி நின்று கொண்டிருப்பார் எனவும் ஜாதி வெறி பிடித்து எடப்பாடி பழனிச்சாமி அலைவதாகவும் காட்டமாக கூறினார்.

திமுகவைக் குறித்து...:

மேலும் திமுகவை பற்றி பேசிய அவர் குடும்பத்தோடு கும்மாளம் போடும் கட்சி தான் திமுக என்றும் அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால்  திமுக தாங்காது என்றும் அதிமுகவின் கடந்த கால வரலாறு பற்றி திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது என்றும் அவர் அப்போது பால்குடித்து கொண்டிருந்திருப்பார் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார் கோவை செல்வராஜ்.

இதையும் படிக்க:   ”பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து.......” துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் கனிமொழி...!!