சென்னையில் மட்டும் 294 பேருக்கு வைரஸ் தொற்று.. மீண்டும் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு...

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது, தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மட்டும் 294 பேருக்கு வைரஸ் தொற்று.. மீண்டும் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 897 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 294 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த படியாக கோவை மாவட்டத்தில் 78 பேருக்கும், செங்கல்பட்டில் 64 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 614 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 2 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.