ஜல்லிக்கட்டில் வெளியூர் காளைகளுக்கே முக்கியத்துவம்..? உள்ளூர் காளைகளுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை...

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டில் வெளியூர் காளைகளுக்கே முக்கியத்துவம்..? உள்ளூர் காளைகளுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை...

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பொந்துகம்பட்டி முத்தாலம்மன் கோயில்  காளையை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கிராமத்தினர் வளர்த்து வந்துள்ளனர்.  இக்காளை  தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஜல்லிக்கட்டு  போட்டிகளுக்கு சென்று பல பரிசுகளை பெற்று ஊருக்கு பெருமை சேர்துள்ளதாகவும். இதனால் பரிசு பொருட்கள் அனைத்தும் கிராமத்தின் மந்தை பகுதியில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு ஊருக்கு பெருமை சேர்த்து, பாசமாக வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோயில் காளை கடந்த 2006 ஆம் ஆண்டு உடல் நலகுறைவால் இறந்தது. இந்த  ஜல்லிக்கட்டு  காளையின் நினைவுகளை போற்றும் விதமாக  கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மணிமண்டபம் கட்டி வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆண்டு தோறும்  ஜல்லிக்கட்டு காளை இறந்த நாளன மே ஒன்றாம் தேதி கிராமமக்கள் ஒன்று சேர்ந்து சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரையும் வரவழைத்து காளையின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மாலை மரியாதை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

மேலும் தற்போது அதன் நினைவாக புதிய ஜல்லிக்கட்டு காளை ஒன்றை கிராமத்தினர் வளர்த்து வருகின்றனர். புதிய காளையை வருடந்தோறும் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு கிராமத்தின் சார்பில் அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து வருவதால் உள்ளூர் காளைகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்க முடியாமல்  சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.