இந்தாண்டுக்குள் கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு!

இந்தாண்டுக்குள் கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு!

சிவகங்கையில், கழிவுகளை உரமாக்கும் திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மானாமதுரையில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : தேவை ஏற்பட்டால் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - செந்தில் பாலாஜி!

இதற்கு பதிலளித்த அமைச்சர், கே.என். நேரு, ஏற்கனவே கசடு மேலாண்மை திட்டத்தின் மூலம்,  கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்த ஆண்டுக்குள் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பதிலளித்தார்.