கரூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை..!

கரூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை..!

கரூரில் அன்னை அப்பார்ட்மெண்ட்டில் சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர் எட்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் சில இடங்களில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சில இடங்களில் ஒத்துழைப்பு அழைக்காததால் சீல் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு இடங்களில் சோதனை மேற்கொண்டு சோதனையானது அன்று இரவே முடிக்கப்பட்டது சென்னையில் நடைபெற்ற சோதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தனர்.

அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். 

இவ்வாறிருக்க, இன்று கரூர்-ஈரோடு சாலையில் உள்ள அன்னை அப்பார்ட்மெண்டில் சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற் கொண்டுவருகின்றனர். கடந்த மாதம் வருமானவரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில்   வருமானவரித்துறை  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காந்திபுரம் நடுத்தெருவில் உள்ள அரசு ஒப்பந்தக்காரர் எம்சி சங்கர் ஆனந்தின் அடுக்குமாடி குடியிருப்பிலும், கரூர் காமராஜபுரம் மேற்கு சாலையில் உள்ள பி எஸ் கே என்ற கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, அப்பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 20 மத்திய பாதுகாப்பு படை போலீசார் தற்போது  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க     | கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : 4 பேர் ஆஜரான நிலையில் நீதிமன்றம் ஒத்திவைப்பு!