சென்னை மேயருக்கான மறைமுக தேர்தல் தேதி வெளியானது - ககன்தீப் சிங் பேடி

சென்னை மேயருக்கான மறைமுக தேர்தல் தேதி வெளியானது - ககன்தீப் சிங் பேடி

வருகின்ற 4 தேதி சென்னை மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேயருக்கான மறைமுக தேர்தலும், பிற்பகல் 2. 30 மணிக்கு துணை மேயருக்கான மறைமுக தேர்தலும், சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தார்,

மேலும் இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.