சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தொழில்துறைகள் முன்னேற்றம் அடையும்...! - அமைச்சர் எ. வ .வேலு.

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தொழில்துறைகள் முன்னேற்றம் அடையும்...! - அமைச்சர் எ. வ .வேலு.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொருத்தப்பட்ட காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா இன்று மாலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

காவல் கண்காணிப்பு கேமராவை திறந்து வைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்று காவல் கண்காணிப்பு கேமராக்களை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி, செய்யார் ஆகிய 6 தொகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் கண்காணிப்பு கேமராக்கள் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக இந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், நகருக்கு உள்ளே வரும் முக்கிய சாலைகள், பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்காணிப்பு கேமரா பொறுத்தவரையில் இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய புதுடில்லியில் உலக அளவில் முதல் இடத்தில் காவல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், உலக அளவில் லண்டன் மாகாணம் கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும், இந்த இரண்டு இடங்களை தவிர தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு சென்னையில் மட்டுமே அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாகவும் த்ரெரிவித்தார். 

மேலும் அவர், மனிதர்களுக்கு இரண்டு கண்கள் இருப்பது பொதுவான விஷயம் ஆனால் மூன்றாவது கண்ணாக கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக நமக்கு தகவல் அளிப்பதாகவும், காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தொழில்துறைகள் முன்னேற்றம் அடையும் எனவும் கூறினார்.  

தொடர்ந்து,  தொழில்துறைகள் முன்னேறினால் பொருளாதாரம் கிடைக்கும்,  குறிப்பாக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் தமிழகத்திற்கு வந்து தொழில்களை துவங்க மாட்டார்கள் எனவும் கூறினார். 
 
இதையும் படிக்க     ]    ஆணைகளில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!

மேலும் பேசுகையில்,  குறிப்பாக வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிலங்கள் வழங்குவார்களா, அல்லது தொழிலாளிகள் உள்ளார்களா, அல்லது இலவச மின்சாரம் தருவார்களா என்பதை கடந்து நாங்கள் துவங்கும் நிறுவனத்திற்கு பயன்பாடாக அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு முறையாக உள்ளதா என்பதைத்தான் முதலில் கேட்பதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக இருப்பதால்தான் வெளிநாட்டு முதலாளிகள் தமிழகத்தில் நிறுவனங்களை துவங்குகின்றனர் என்று பேசினார்.

இதையும் படிக்க     ]  "மத்தியமும்... மையமும்" .....! அப்போ ஒண்ணா சேர்ந்து போனாங்க வாக் -கு ..! இப்போ ஒண்ணா சேர்ந்து கேக்குறாங்க வாக்கு...!