"பிறக்கவிருக்கின்ற குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும்" செஞ்சி மஸ்தான் வேண்டுகோள்!!

குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி. மாஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒலக்கூர் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் , சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வைத்துள்ளார்.

அப்பொழுது, கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தி பேசிவிட்டு, "பெண்களுக்கு அனைத்து வகைகளிலும் உறுதுணையாக ஆட்சி செய்து வருகின்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோளின் படி கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும்  தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.