காவல் ஆணையருக்கு சிகிச்சை முடிந்தது... 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்...

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நலமுடன் இருப்பதாக தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர். 

காவல் ஆணையருக்கு சிகிச்சை முடிந்தது... 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்...

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வழக்கம் போல் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த போது அவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோ சிகிச்சை மூலம் அடைப்பு சரி செய்யப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருப்பதான ஸ்டன்ட் கருவியும் பொருத்தப்பட்டு  உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவமனைக்கு வந்த தமிழக டி. ஜி.பி சைலேந்திர பாபு மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.  2 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.