தூத்துக்குடியில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி... அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி...

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி... அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை மழைக் காலத்திற்கு முன்பாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து "மெகா தூய்மைப்படுத்தும் பணிகள்" இன்று தொடங்கியது. இதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். இந்த பணிகள்  இன்று முதல் 5 நாட்கள் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நடைபெறுகிறது. தூய்மை பணியில்  தூத்துக்குடி மாநகராட்சி உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750 பணியாளர்கள், மேள்பார்வையாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காலத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடித்துவிட திட்டமிட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் மாநகர பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் விதமாக 32 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 26 இடங்களில் மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற மின்சார மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளும் ஒருங்கே நடைபெறுகின்றன.

தற்பொழுது மாநகராட்சிக்குள் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளையும் மழை காலத்திற்கு முன்பாகவே முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். பெரும்பாலான இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் விரைந்து முடிப்பதற்கு மாநகராட்சி பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. கடந்த வாரம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 22 கிராமங்களில் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.