புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

600 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு போக்குவரத்துத்துறை ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.
 
தரமான மற்றும் வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து வாங்குவதற்கான தேவை எழுந்துள்ளது. இதற்காக 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக 600 பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதில் 150 முழுமையான தாழ்தள பேருந்துகளும் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:சென்னையில் 'ஸ்குவாஷ் உலககோப்பை -2023' இன்று தொடக்கம்!