தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம்,  தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறியுள்ளது. தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தியுள்ளது.