வழக்கமான நேரங்களிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும்...

வழக்கமான நேரங்களிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும்...

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போதும்போல் வழக்கமான நேரங்களிலேயே நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நாளை அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூாிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் எப்போதும்போல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | களை கட்டிய வார சந்தை... ரூ.8 கோடிக்கு மேல் வர்த்தகம் ...