நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் கே.என். நேரு!

நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் கே.என். நேரு!

தென்காசி தொகுதிக்கு, இன்னும் ஒருமாத காலத்தில் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.  

தென்காசி நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படுமா என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்...கேரளா அனுமதி அளித்ததும் தொடங்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்!

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தற்போது தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6புள்ளி 2 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும், 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தப்பட்ட திட்டத்தின் மூலமாக 78 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், நிதி ஆதாரம் கிடைத்தவுடன், ஒரு மாத காலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவு படுத்தப்படும் என்று கூறினார்.