'கண்ணொளி காப்போம்’ திட்டம்...துவங்கி வைத்த முதலமைச்சர்!

'கண்ணொளி காப்போம்’ திட்டம்...துவங்கி வைத்த முதலமைச்சர்!

’கண்ணொளி காப்போம்’ திட்டத்தின் கீழ் நடமாடும் கண் மருத்துவர் பிரிவு சேவை வாகனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார். குறிப்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ’கண்ணொளி காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு...ஈபிஎஸ், சசிகலா இரங்கல்!

இந்த திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவ பிரிவு சேவை வாகனத்தை முதலமைச்சர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.  

முதற்கட்டமாக, கண்ணொளி பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடிய மாவட்டங்களாக கண்டறியப்பட்ட 8 மாவட்டங்களில் இந்த திட்டம் தற்பொழுது செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.