முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பண மோசடி புகார்...தகவல் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் தகவல்
ரூ.14 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரள பெண் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் தற்போது நெல்லை காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆல் தொடர்ந்து மிரட்ட படுவதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
தீபாவளி முடிந்து டிஜிபி யை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாகவும் இந்த சூழ்நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்திற்காக நெல்லையில் டிஐஜியிடம் புகார் கொடுத்ததாக சர்மிளா தெரிவித்தார்.
மேலும் நாங்களும் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் ஒன்றாக பல இடங்களில் கூடியுள்ளோம் இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இவை அனைத்தும் டிஜிபியிடம் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.