கொடநாடு கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் திங்கள் கிழமை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என  அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருத்தகை தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் திங்கள் கிழமை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என  அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருத்தகை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளையொட்டி சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு எம்.பி கே.வீ.தங்கபாலு,  காங்கிரஸ் சட்டபேரவை தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை;முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குடியிருந்த எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் மர்மாக உள்ளது. ஆகையால் வரும் திங்கள் கிழமை சட்டப்பேரவையில் விதி எண் 55 கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டு வரப்படும் என கூறினார்.