பணம் கொடுத்தா தான் ஃபிரைட் ரைஸ் தருவியா ?....கடுப்பான போதை வாலிபர்....கட்டையால் ஹோட்டல் மாஸ்டரை தாக்கிய கொடூரம்...சிசிடிவி வைரல்...!!....!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே  ஃபிரைட் ரைஸுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த போதை வாலிபர் ஹோட்டல் மாஸ்டரை செண்டரிங் கட்டையால் தலையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கொடுத்தா தான் ஃபிரைட் ரைஸ் தருவியா ?....கடுப்பான போதை வாலிபர்....கட்டையால் ஹோட்டல் மாஸ்டரை தாக்கிய கொடூரம்...சிசிடிவி வைரல்...!!....!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹோட்டல் மாஸ்டராக ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் பணியாற்றி வந்தார்.

அந்த உணவகத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர், மது அருந்திவிட்டு போதையில் வந்துள்ளார். அப்போது ஹோட்டல் மாஸ்டரிடம் தனக்கு ஃபிரைட் ரைஸ் வழங்கவேண்டுமென தகாத வார்த்தைகளைக் கூறி கேட்டுள்ளார். அதற்கு மாஸ்டர் பணம் கொடுத்தால் உடனே பிரைட்ரைஸ் தருவதாக கூறியுள்ளார்.

தன்னிடம் பணம் கேட்பதா என கோபமடைந்த வினோத்குமார் மேலும் தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. உடனடியாக கடை உரிமையாளர் அவரை எச்சரித்து அனுப்பி உள்ளார். கோபத்துடன் போதையில் வெளியில் சென்ற வினோத்குமார் சென்டரிங் கட்டையை எடுத்து வந்து ஹோட்டல் மாஸ்டர் ஆறுமுகத்தின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பியோடினார்.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. அதனைதொடர்ந்து தலையில் பலமாக அடிபட்டு காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் முருகன் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத் குமாரை தேடி வருகின்றனர்.