தமிழகத்தில் தொடர்கிறதா ஊரடங்கு..? திறக்கப்படுமா பள்ளிகள்..?  இன்று முதலமைச்சர் ஆலோசனை...

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், அதிகாரிகளுடன் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று  ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் தொடர்கிறதா ஊரடங்கு..? திறக்கப்படுமா பள்ளிகள்..?  இன்று முதலமைச்சர் ஆலோசனை...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  வெகுவாக சரிந்து வருவதால்  முழு ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக முழுவதும் சகஜ நிலையில திரும்பியுள்ளது.
 
எனினும் பொது மக்களின்  நலன் கருதி ஜுலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டது.   அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன்  முடிவடைய உள்ள நிலையில், 10வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும்,சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும்  அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
 
இந்த ஆலோசனைக்கு பிறகு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில்  திரையரங்குகள் மூடப்பட்டு கிடப்பதால் அந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழுந்து பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை திறக்க அனுமதி அளிப்பது குறித்தும்  அதேபோல் மதுபான பார்களை திறக்க அனுமதி அளிப்பது பற்றியம்  இந்த கூட்டத்தில் முதலமைச்சர்“ ஆலோசனை கேட்க உள்ளார்.  அத்துடன் தமிழகத்தில்  பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான முக்கிய அறிவிப்பும்   இன்று வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.