199 ரூபாய்க்கு மொபைல் விற்பனை.. மளமளவென கூடிய மக்கள் கூட்டம்.. திணறி போன ஊழியர்கள்!!

மதுரையில் 199 ரூபாய்க்கு செல் போன் விற்பனை என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

199 ரூபாய்க்கு மொபைல் விற்பனை.. மளமளவென கூடிய மக்கள் கூட்டம்.. திணறி போன ஊழியர்கள்!!

199 ரூபாய்க்கு செல் போன்:

செல் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஒரு தனியார் நிறுவனம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய கிளையை இன்று திறக்கிறது. இந்த திறப்பு விழாவையொட்டி, நிறுவனம் சார்பில் முதலில் வரும் 100 நபர்களுக்கு 199 ரூபாய்க்கு செல் போன் வழங்கப்படும் என உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.

அலைமோதும் மக்கள் கூட்டம்:

இதை பார்த்ததும் நூற்றுக்கணக்கானோர் கடை முன் திரண்டனர். மக்கள் அதிக அளவில் கூடியதால், கடை முன் தடுப்பு அமைக்கப்பட்டு, அனைவரும் வரிசையாக வரும்படி கடை உரிமையாளர்கள் கூறினார். இதற்கு யாருமே ஒப்பு கொள்ளவில்லை போல.. அனைவரும் நான் தான் முதலில் போவேன் என கடை முன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த கூட்டத்தை கட்டு படுத்த முடியாமல் கடை உரிமையாளர்க;ள் திணறி வந்த நிலையில், தகவல் அறிந்த வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய காவலர்களும் கூட்டத்தை சரி செய்ய முடியாமல் திணறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.