கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மலா் கண்காட்சி.. அலைமோதும் மக்கள் கூட்டம்!!

சென்னை மலா் கண்காட்சி  இரவு 8 மணியுடன் நிறைவடைகிறதை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மலா் கண்காட்சி..  அலைமோதும் மக்கள் கூட்டம்!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு  சென்னையில் மலர் கண்காட்சிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது. ஊட்டி மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் 3 நாள் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.  

பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 50- ரூபாயும், சிறுவர்களுக்கு 20 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மலர் கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.  மலர் கண்காட்சியை நீட்டிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.