மலேசியாவிலிருந்து கஞ்சா எண்ணெய் கடத்திய நபருக்கு 10 ஆண்டு சிறை !!!

மலேசியாவிலிருந்து கஞ்சா எண்ணெய் கடத்திய நபருக்கு 10 ஆண்டு சிறை !!!

மலேசியாவிற்கு கஞ்சா எண்ணெய் கடத்திய சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்சத்கான் என்பவர் மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் சோதனை நடத்தினர்.

அம்சத்கானின் உடைமைகளில் சோதனையிட்ட போது அலுமினிய தாளில் சுற்றப்பட்ட 9 பிளாஸ்டிக் பைகளில் ஒரு கிலோ 530 கிராம் எடையுள்ள ஜெல்லி மிட்டாய் வடிவில் ஹாசிஷ் என்கிற எண்ணெய் வடிவிலான போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருளையும், 76 ஆயிரத்து 939 ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்ததுடன், இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு..! நேர்த்திக்கடன் செலுத்த ஆன்மீக பயணம் மேற்கொண்ட அதிமுகவினர்

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை முதலாவது கூடுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.செல்லதுரை ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, அம்சத்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்