அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளை ரத்து செய்யக்கூடாது - அன்புமணி ராமதாஸ்!
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளை ரத்து செய்யக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளை ரத்து செய்யக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருப்பது கவலையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 3, ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்ததால் முதுகலை படிப்புகள் நிறுத்தப்படுவதாக துணைராஜ் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதவது, மாணவர் சேர்க்கை குறையும் பட்சத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவது தான் சரியான செயலாக இருக்கும். மாறாக, இருக்கும் படிப்புகளை நிறுத்துவது அண்ணா பல்கலைகழகத்திற்கு அழகு அல்ல.நெல்லை வளாகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தப்பட்டால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிக்க சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டும். அதை தவிர்க்க நெல்லையில் முதுநிலை படிப்புகள் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருப்பது கவலையளிக்கிறது. இது உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் செயலாகும்!(1/4)#Tirunelveli #AnnaUniversity #PG #Engineering
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 7, 2022