காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா.. பதக்கங்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தமிழக அரசின் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான பதக்கங்களை வெல்லும் காவல்துறையினருக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா.. பதக்கங்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பணியின்போது சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், தமிழகம்  அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான பதக்கங்களை வெல்லும் காவல்துறையினருக்கும், உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் ஊக்கத்தொகை, மத்திய அரசு வழங்கும் ஊக்கத் தொகைக்கு இணையாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.