ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழு....உச்சநீதிமன்றம் உத்தரவு...!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க டெல்லி எய்ம்ஸ் இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழு....உச்சநீதிமன்றம் உத்தரவு...!!

ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க கோரி அப்பல்லோ தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருந்த நிலையில் அந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதேபோல சாட்சிகளின் வாக்கு மூலங்களை ஆராய அப்பல்லோ தரப்போ, சசிகலா தரப்போ ஆணையத்தை அணுகி கோரிக்கை வைக்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.