இப்படி செய்த தமிழக அரசு: நெகிழ்ந்து போன திருநங்கைகள்!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான மருத்துவப்பிரிவு வெள்ளிக்கிழமை தோறும் செயல்பட உள்ளது.

இப்படி செய்த தமிழக அரசு: நெகிழ்ந்து போன திருநங்கைகள்!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான மருத்துவப்பிரிவு வெள்ளிக்கிழமை தோறும் செயல்பட உள்ளது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு புறநோய் மருத்துவப் பிரிவு வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. இது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை செயல்பட உள்ளது. இந்த புறநோய் மருத்துவப் பிரிவில் மனநல மருத்துவர் பால்வினை நோய் மருத்துவர், நாளமில்லாச்சுரப்பிகள் துறை மருத்துவர், ஓட்டுறுப்பு அறுவையியல் துறை மருத்துவர் கொண்டு செயல்பட உள்ளது.

மேலும், இப்பிரிவில் திருநங்கைகள் தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடையுமாறு ராஜீவ் காந்திக்கு மருத்துவரை நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளது.