45 வருடங்களுக்கு முன் பயிற்சி பெற்ற பல்வேறு படை அதிகாரிகள் சந்திப்பு..!

குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை பாதுகாப்பு அதிகாரிகள், பயிற்சி கல்லூரியின் சார்பில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

45 வருடங்களுக்கு முன் பயிற்சி பெற்ற பல்வேறு படை அதிகாரிகள் சந்திப்பு..!

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 45 வருடங்களுக்கு முன் பயிற்சி பெற்று மெட்ராஸ் ரெஜிமென்டின் பல்வேறு படை பிரிவுகளில் பணியாற்றிய 30 அதிகாரிகள், 45 வருடங்களுக்கு பிறகு இன்று சந்தித்து வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  இலங்கைக்கான அமைதிப்படை பிரிவு, கார்கில் போர், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைதிப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இந்த அதிகாரிகள் தற்போது ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் சந்தித்து தங்களது அனுபவங்களை இன்றைய பயிற்சி அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.  

குறிப்பாக நிகழ்வில்  பங்கேற்ற ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்களது துணைவியார்களுடன் பங்கேற்று நினைவு தூணில் அஞ்சலி செலுத்தியது, தற்போது பயிற்சி பெற்று வரும் முப்படை பாதுகாப்பு பயிற்சி அதிகாரிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாக இருந்ததாக தற்போதுள்ள பயிற்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் பங்கேற்ற அதிகாரிகள் நாட்டின் பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வில் வெலிங்டன் முப்படை அதிகாரிகள், பயிற்சி கல்லூரியின் தலைவர் வீரேந்திர வட்ஸ்  உட்பட பல்வேறு  முன்னாள் மற்றும் இன்னாள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.