வருகிற 12ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வருகிற 12ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னையில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா, கேரளா போல் தமிழகத்திலும் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றார்.  சென்னையில் 22 இடங்களில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவல் உள்ளதாகவும் கூறினார். தொற்று பரவலின் வேகம் கூடுதலாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

முதல் தவணை தடுப்பூசியை 42 லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 1 கோடியே 22 லட்சம் பேரும் செலுத்த வேண்டியதுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் கூறினார். 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட மறுநாள் முதல்  12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தனியார் மருத்துவமனைகள் 388 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.