3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

சென்னை புரசைவாக்கம் ரித்தன் சாலை பகுதியில் வசித்து வந்தவர் சினேகா(32). இவருக்கு பராஸ் என்பவருடன் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இந்தநிலையில் இவருக்கு ஓராண்டுக்கு முன்பாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்காரணமாக சிசேகா தனியார் மருத்துவமனையில் 9 மாதங்கள் சிகிச்சை பெற்று கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று மாலை சரியாக 6. 30 மணியளவில் மூன்றாவது மாடிக்கு சென்ற சினேகா மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்த உறவினர்கள், அங்கிருந்தவர்கள் சினேகாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.