ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக மிலானி தொடர்ந்த வழக்கு... நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!! என்ன கேஸ்?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக மிலானி தொடர்ந்த வழக்கு... நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!! என்ன கேஸ்?

2021 ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து மிலானி என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் வேட்புமனுவில் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை மறைத்ததால், வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதமானது என கூறி மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.