புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் அமர்ந்த அமைச்சர் உதயநிதி

பாதைகள் மாறா பயணம் டி.ஆர்.பாலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பலரும் கலந்துக்கொண்டனர் அதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசியவை .

புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் அமர்ந்த அமைச்சர் உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு :

டி.ஆர்.பாலுவுக்கு என்னுடைய வாழ்த்துகள். கழகத்தில் எளிய தொண்டனாக 17 வயதில் தொடங்கி கருணாநிதியுடன்  பயணத்தை தொடங்கி இன்று பொருளாளராக உள்ளார். 

இந்த நூல் வரலாறு பெற்ற நூல். கழக பொருளாளராகவும், டெல்லியில் தமிழகத்தின் முகமாக இருக்கிறார். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் பாதை மாறா பயணத்தின் இந்த நூல் இளைய சமுதாயத்திற்கானது. 

மேலும் படிக்க | பிடித்திருந்தால் இரு இல்லன நகரு ஆளுநரை சாடிய சீமான்

சென்னை முதல் மன்னார்குடிக்கு ரயில் வசதி ஏற்படுத்தியது, அகல ரயில் பாதை அமைத்தது என பல சாதனைகளை படைத்துள்ளார். பெரியார், கருணாநிதி உரைகள் இவரை இயக்கத்தில் சேர வைத்துள்ளன. அண்ணாவும், கருணாநிதியும் சிந்திக்கும் வழியில் இவர் செயல்படுவார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.  

உழைப்பால் கட்சி, ஆட்சி இரண்டிலும் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ள டி.ஆர்.பாலுவின் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்.   டி.ஆர்.பாலு  கண்டிப்பானவர் என்பது 100% உண்மை. முதலமைச்ச் முக ஸ்டாலின் ஒருவரை பார்த்து பயப்படுகிறார் என்றால் அது டி.ஆர்.பாலு தான் என தெரிவித்தார்.