பொதுப்பாடத் திட்டம்; விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி!

பொதுப்பாடத் திட்டம்; விளக்கம்  அளித்த அமைச்சர் பொன்முடி!

பொதுப் பாடத்திட்டம் கல்வி வளர்ச்சிக்காகவே கொண்டு வரப்பட்டதாகவும், யாருடைய அதிகாரத்தையும் பறிப்பதற்காக அல்ல எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 

இதையும் படிக்க : லிப்டில் சிக்கிய சிறுவர்கள்... பதறி அடித்து வந்த பராமரிப்பாளர்கள்...எழும்பூரில் பரபரப்பு!

அப்போது பேசிய அமைச்சர், பொதுப் பாடத்திட்டம் கல்வி வளர்ச்சிக்காகவே கொண்டு வரப்பட்டதாகவும், யாருடைய அதிகாரத்தையும் பறிப்பதற்காக அல்ல என்று விளக்கம் அளித்தவர், கலந்தாய்வு கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிலர் தவிர மற்றவர்கள் பொதுப்பாடத்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கும் பொது பாடத்திட்டம் எதிர்ப்புக்கு, என்னிடம் வந்து நேரடியாக கேட்டால் கூட விளக்கம் தர தயாராக  இருக்கிறேன் என்றார்.