கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை...!!

கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை...!!

சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளை முன்னிட்டு கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைக்கு அமைச்சர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாள் அன்று சென்னையில் தமிழ்நாட்டின் கலாச்சாரச் சின்னமாகத் திகழ்ந்து வரும் கண்ணகியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அவ்வகையில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு அமைச்சர்கள் சேகர் பாபு, கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சென்னை  பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள தொல்காப்பியரின் உருவச் சிலைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க:தனித்துவத்தை இழக்கிறதா சென்னை மாநகராட்சி...??