காணாமல் போன குழந்தை 6 நாட்களுக்குள் மீட்பு - காவல்துறையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட 11 மாத குழந்தை தனிப்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

காணாமல் போன குழந்தை 6 நாட்களுக்குள் மீட்பு - காவல்துறையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட 11 மாத குழந்தை தனிப்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனாம்படுகையில் கடந்த 15-ம் தேதி இரவு 11 மாத குழந்தை ஒன்று கடத்தப்பட்டது.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றது.

இந்நிலையில், 6 நாட்களுக்கு பின்பு குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.