தமிழ்நாட்டில் ஜூலை 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...!வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் ஜூலை 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...!வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூலை ஒன்றாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : 4 வது நாளாக எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள்...அதிரடி நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை!

அதன்படி, ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 01 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.