மோடி தன் தாய் மீது பாசம் - கமலாலயத்தில் ஜெயக்குமார் அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி அவர் தாய் மீது ஒரு அளவற்ற பாசம் கொண்டிருந்தார் அவரின் இழப்பு அனைவருக்கும் பேரிழப்புக்கான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்

மோடி தன் தாய்  மீது பாசம் - கமலாலயத்தில் ஜெயக்குமார் அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் பிரதமரின் தாயாரின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருக்க முடியும் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நம்முடைய பாரத பிரதமருடைய தாய் அவர்களைப் பொறுத்தவரை  பல்வேறு  காலகட்டத்தில்  வீட்டு வேலை கூட செய்து பிள்ளைகளை எல்லாம் கவனிக்க வேண்டும்  பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்ற வகையிலே அவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி அதன் மூலம் இந்தியாவிற்கு  ஒரு பாரத பிரதமர் உருவாக்கினார்கள்.

மேலும் படிக்க | மதுரை மேயர் மாற்றமா? டோஸ் விட்ட நேரு.... அப்செட் ஆன மேயர்

 இன்றைக்கு பாரதப் பிரதமரின் தாய்க்கு  குழந்தைகளை நன்றாக   நன்றாக வளர்க்க வேண்டும் தன்னுடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி தன்னுடைய குழந்தைகள் அது பாசம் என்பது வளர்ப்பதுடன் மட்டுமல்லாமல் பாசத்தை வந்து அதிகமாக அளவிற்கு ஒரு அன்பு காட்டுவது என்பது நிச்சயமாக வந்து அது நமக்கு தெரிந்து கொண்டு அந்த வகையில் தான் வந்து பிரதமர் அவர்களும் அதேபோன்று தாயார் அவர்களும் மாறி மாறி தங்களுடைய அன்பை பொழிந்துள ளனர்

இந்த செய்தி வாயிலாக நாம் நிச்சயமாக அறிந்திருக்க முடியும் அந்த வகையில் வந்து ஒரு சிறந்த தாய் என்றைக்கு வந்து 100 வயது வாழ்வது என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது  என்றும் அதுவும் இன்றைக்கு உள்ள இளைஞர்கள் வந்து ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் 

என்று சொன்னால் உணவு முறைகளை கட்டுப்பாடு அதேபோன்று ஒரு நல்ல ஒரு மனவலிமை  நல்ல எண்ணம் நல்ல சிந்தனைகள் இவைகள்  இருந்தால் நிச்சயமாக 100 வயது நிச்சயமாக வாழலாம் அதிலிருந்து ஒரு மாறுபட்ட கருத்தும் இல்லை அதுவும் ஒரு பாடமாக நமக்கு இந்திய தாய் நாட்டு மக்களுக்கு அளித்துவிட்டு சென்றிருக்கின்றார்கள் எனவே அவருடைய மறைவு என்பது பாரத பிரதமருக்கு ஒரு பெரிய அளவுக்கு பேரிழப்பு  செய்ய முடியாத ஒரு இழப்பாக இருக்கின்ற நிலையில் அவருக்கு எங்களுடைய ஒரு ஆழ்ந்த அந்த கவலையும் வருத்தத்தையும் மூலமாக தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்

இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் பா வளர்மதி மாவட்ட கழக செயலாளர் விருகை ரவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ் ஆர் விஜயகுமார் டாக்டர் ஜெயவர்தன் அம்மா பேரவை செயலாளர் வேளச்சேரி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்