பெண் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் - டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி துணைவேந்தர் சுதா சேஷய்யன்

பெண்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும் என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

பெண் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் - டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி துணைவேந்தர் சுதா சேஷய்யன்

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற "கல்லூரி நாள்" நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஒவ்வொரு துறை சார்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய அவர்,  பெண்களுக்கான கல்வி என்பது மிக மிக அவசியம் என்றும் பெண்கள் அதிகமான சிந்திக்கக் கூடிய திறன் படைத்தவர்கள் என்றும் எந்தவிதமான கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் மனநிலையை இயல்பிலேயே கொண்டவர்கள் என்றும் பெண்களின் மன வலிமை மற்றும் திறமை குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதனை வெளிக்கொண்டுவர கல்வி மிகவும் அவசியம் என குறிப்பிட்ட அவர், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறித்தினார்.