முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

திருச்சியில் தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


திருச்சியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் புதிய ரயில்வே தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படவில்லை .

இதையும் படிக்க : விடிய விடிய 5 வது நாளாக தொடரும் கால்வாய் பணிகள்...!

இதன் காரணமாக வைகை, குருவாயூர், பொதிகை, நெல்லை, பாண்டியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ரயில்கள் மற்றும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்களும் சுமார் 5 மணி நேரம் தாமதமாக செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் ஆகிய மாவட்டத்திற்கு இயக்கப்படும் 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.