ஏலச்சீட்டு நடத்தி சுமார் 5 கோடிக்கு மேல் மோசடி....

பண்ருட்டி அருகே  ஏலச்சீட்டு நடத்தி சுமார் 5 கோடிக்கு மேல் மோசடி  செய்தவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

ஏலச்சீட்டு நடத்தி சுமார் 5 கோடிக்கு மேல் மோசடி....

கடலூர்  மாவட்டம் பண்ருட்டிஅடுத்த திருவதிகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து.  பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர், குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தியதாக தெரிகிறது. இந்த நிறுவனத்தில் திருவதிகை பகுதியை சேர்ந்த  200க்கும் மேற்பட்டோர் 2 லட்சம் முதல் 5  லட்சம் வரை ஏலச்சீட்டு கட்டியுள்ளனர். 

இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாரிமுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏலச்சீட்டு பணத்தை தருவதாக உறவினர்கள் உறுதி அளித்த நிலையில், இதுவரை சீட்டு பணத்தை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  

தகவல் அறிந்த பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார்  விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து  போராட்டம் கைவிடப்பட்டது.