"பூத் கமிட்டியில் பெண்களை அதிகம் சேர்க்க வேண்டும்" - நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

"பூத் கமிட்டியில் பெண்களை அதிகம் சேர்க்க வேண்டும்" - நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

அடுத்த 7 மாத கால மும் ஓய்வின்றி தீவிரமாக உழைக்க வேண்டும் என்று, பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்னதாகவே துவங்கியது.

அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ஆலோசனைக் கூட்டத்திற்கு பங்கேற்க வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிர்வாகிகள் இடையே உரையாற்றிய அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் வாரம் தவறாமல் கிளைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், அடுத்த 7 மாத கால மும் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும்  தி. மு.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.  

பெண்களை அதிக அளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் என்றும் கூறிய அண்ணாமலை, கூட்டணியை விட்டு யார் சென்றாலும் செல்லட்டும் , அது அவரவர் விருப்பம் என்றும் கூறினார். 

இதையும் படிக்க   | பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...!