கனமழை காரணமாக ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் தாய், மகள் பலி...

வேலூரில் தொடர் மழையின் காரணமாக பாறை உருண்டு விழுந்ததில்,  தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் தாய், மகள் பலி...

வேலூரில் தொடர் மழையின் காரணமாக பாறை உருண்டு விழுந்ததில்,  தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காகிதபட்டறை பகுதியில் தொடர் கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று, மாலைப்பகுதியில் இருந்து உருண்டு ரமணி என்பவர் வீட்டின் மீது விழுந்தது.

இதில் வீடு முற்றிலுமாக இடிந்து சரிந்தது.  இடிபாடுகளுக்குள் 45 வயதான ரமணி மற்றும் 24 வயதான அவரது மகள் நிஷாந்தி ஆகியோர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த  தீயணைப்புத் துறையினர், தாய் ரமணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மகள் நிஷாந்தியை மீட்க இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெற்றது. பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, 5 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்றது. இந்நிலையில், நிஷாந்தி சடலமாக மீட்கப்பட்டார். ரமணியின் கணவர் வேலைக்கு சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.