தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேட்டில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் 1 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்திருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் உத்வேகத்தோடு செயலாற்றி வெற்றி பெற வேண்டும் என்றும் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளதாகவும், நாள்தோறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார்.