அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் செருப்பை ஏற்றி வைத்த மர்ம நபர்கள்... ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு...

50வது ஆண்டுவிழா கொண்டாடும் நிலையில் ஆண்டிப்பட்டி அருகே அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் செருப்பை ஏற்றி வைத்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் செருப்பை ஏற்றி வைத்த மர்ம நபர்கள்... ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை மயிலை  ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடி கம்பத்தில் ஏற்றி வைத்திருந்த கொடியை அகற்றி செருப்பை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளனர். 

காலையில் விடிந்தவுடன் கொடிக்கம்பத்தில் செருப்பு இருப்பதை பார்த்த அதிமுகவினர் மற்றும் பொதுமககள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் கொடிக்கம்பத்தில் இருந்து செருப்புகளை அகற்றினர். மேலும் அதிமுகவினர் கொடியில் புதிய கொடியை ஏற்றி வைத்தனர்.

அதிமுக கொடியை அவமதித்த மர்மநபர்களை கண்டுபிடித்து கைது செய்யும்படி போலீசாரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்தனர். அதிமுக 50வது ஆண்டுவிழா கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடியில் செருப்புகளை ஏற்றி வைத்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.