மின்வாரிய ஊழியர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்..! நகை, பணம் கொள்ளை..!

கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் பணம் மற்றும் நகை திருட்டு...!

மின்வாரிய ஊழியர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்..! நகை, பணம் கொள்ளை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் (73). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவனையில்; அனுமதித்துள்ளனர். இதனால் வீட்டை பூட்டிவிட்டு மனைவிக்கு உதவியாக ஆறுமுகமும் மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் ஆறுமுகம் வீடு திரும்பி பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது, பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்து, அதிலிருந்த நகைகள், பணம் கொள்ளை போனதும் தெரிய வந்துள்ளது. அந்த நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பெயரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.