மகனின் நினைவு தினத்தில், ரத்த தானம் செய்த தந்தை!!!

நாமக்கல்லில் விபத்தில் மறைந்த மகனின் பிறந்த நாளில் தந்தை நடத்திய இரத்ததானம் முகாமை எம்.எல்.ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

மகனின் நினைவு தினத்தில், ரத்த தானம் செய்த தந்தை!!!

நாமக்கல் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பொறியாளர் அஜித்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்த இவரது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த நிலையில் மகன் மறைந்த பிறகு கிருஷ்ணமூர்த்தி தனது  மகனின் பிறந்த நாளில் தொடர்ந்து இரத்த தான முகாம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று மகன் அஜித்குமார் பிறந்த நாளையொட்டி நாமக்கல் ராஜூவ் காந்தி நகரில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் மறைந்த அஜித்குமாரின் நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர்.