நீட் தேர்வு மசோதா... அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக..!

நீட் தேர்வு மசோதா தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு மசோதா... அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக..!

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய தகவல்கள் மற்றும் அடுத்த கட்டமாக மீண்டும் ஒருமசோதாவை தாக்கல் செய்து அனுப்புவது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் நீட் தேர்வு மசோதா தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக அதிமுக முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு மசோதா தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துவிட்ட நிலையில் தற்போது அதிமுகவும் கூட்டத்தை புறக்கணிகக் முடிவு செய்துள்ளது.